மேலும்

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெயசங்கர்

s.jaishankarஇந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றுமாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலருடன் வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவொன்றும் சிறிலங்கா வந்துள்ளது.

இவர்கள், சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், வர்த்தகப் பிரதிநிதிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

சிறிலங்காவில் இந்தியாவின் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து, இந்தச் சந்திப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் மற்றும் பொருளாதார ரீதியான செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே, இந்திய வெளிவிவகாரச் செயலரின் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *