மேலும்

யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் உத்தரவு

yoshithaஅரசாங்க சொத்துக்களை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ச கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவருடன் ரொகான் வெலிவிட்ட, நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட நான்கு பேரும், கடுவெல நீதிமன்ற நீதிவான் தம்மிக ஹேமபால முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

shiranthi-court (1)shiranthi-court (2)

அதேவேளை, கடுவெல நீதிமன்ற வளாகத்தில், மகிந்த ராஜபக்ச, சிராந்தி ராஜபக்ச, பசில் ராஜபக்ச,கோத்தாபய ராஜபக்ச , நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர், கூடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *