மேலும்

ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

gnanasara-courtநீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஹோமகம நீதிமன்றத்தினால் விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள, ஞானசார தேரர் தம்மைப் பிணையில் விடுவிக்கக் கோரி ஹோமகம நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த பிணை மனுக் கோரிக்கையைப் பரிசீலித்த ஹோமகம நீதிவான் நீதிமன்ற நீதிவான், ரங்க திசநாயக்க அதனை நிராகரித்தார்.

‘எனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு கேட்டாலும் கூட, ஞானசாரருக்கு பிணை வழங்க மறுக்கும் முடிவை மாற்ற மாட்டேன்.

எனது முடிவில் தவறு இருந்தால் மேல் அதிகாரிகளை நாடலாம். நான் இந்த வழக்கில் தலையிடக் கூடாது என்று நினைக்கிறேன்.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரவுள்ளேன்” என்றும் ரங்க நீதிவான் திசநாயக்க தெரிவித்தார்

தற்போது ஞானசார தேரர் வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *