மேலும்

பொறுப்புக்கூறும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம் – ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்

Keith-Harperசிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் கெய்த் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில்,

“சிறிலங்காவில் எந்த பொறுப்புக்கூறும் பொறிமுறையினது நம்பகத்தன்மைக்கும், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளிட்ட ஏனைய தலையீடுகள் அவசியமானது. அந்த நிலை மாறாது”  என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானம் வரையப்பட்ட போது, கெய்த் ஹாப்பர் அது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை  நடத்தியிருந்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு இருந்தால் மட்டுமே, பொறுப்புக்கூறும் பொறிமுறைகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் அப்போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *