மேலும்

‘ஒற்றையாட்சி’யில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – சிறிலங்கா அமைச்சர்

chandima-weerakkodiஒற்றையாட்சி விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்றும், புதிய அரசியலமைப்பில் அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சித் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசியலமைப்பை வரைவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்காது.

ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையிலும், மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலுமே, புதிய அரசியலமைப்பு வரையப்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுதியளிக்கிறது.

ஏனைய மதங்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் அதேவேளை, தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்து வழங்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *