மேலும்

கிளிநொச்சியில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்கும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வரும் 21ஆம் நாள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாணசபை மற்றும் கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், நீடித்த- நிலையான- அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில்  கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றதாகவும், இதில், அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை வரைவது மற்றும் அது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *