மேலும்

நாள்: 13th November 2015

பாரிசில் தொடர் தாக்குதல்கள் – 60 பேருக்கு மேல் பலி, 100 பேர் பணயக்கைதிகளாக பிடிப்பு

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் இன்றிரவு இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

வளிமண்டலத்தில் எரிந்து போனது மர்மப்பொருள் – ஆர்தர் சி கிளார்க் நிலையம் அறிவிப்பு

சிறிலங்காவுக்கு தெற்கேயுள்ள கடலில் இன்று விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட எனப் பெயரிடப்பட்ட மர்மப்பொருள், வளிமண்டலத்துக்குள் நுழைந்த போது எரிந்து போய் விட்டதாக ஆர்தர் சி கிளார்க் நிலையம் அறிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலை ஒப்புக்கொள்கிறார் சரத் பொன்சேகா

போர் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த, புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினரால் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது உண்மையே என்று ஒப்புக் கொண்டுள்ளார் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

மருத்துவ சோதனைக்காக திடீரென சிங்கப்பூர் சென்றார் ரணில் – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முற்றிலும் செயலிழந்தன – முழுஅடைப்பு போராட்டம் வெற்றி

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தினால், வடக்கு,கிழக்கு மாகாணங்கள் முற்றாகவே செயலிழந்து போயுள்ளன.

மர்மப்பொருள் விண்வெளியில் எரிந்து போனதா?

விண்வெளியில் இருந்து இன்று காலையில் சிறிலங்காவுக்குத் தெற்கேயுள்ள கடற்பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்மப்பொருள், இன்னமும் விழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை விழுகிறது மர்மப்பொருள் – தெற்கு கரையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் காத்திருப்பு

இன்று காலை சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில் விழும் என்ற எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருளைக் கண்காணிக்க ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகளும், இலங்கை விஞ்ஞானிகளும், தயார் நிலையில் உள்ளனர்.

நான்காவது நாளாக உண்ணாவிரதம் – மருத்துவ சிகிச்சையை அரசியல் கைதிகள் நிராகரிப்பு

தம்மை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக் கோரி, நேற்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதத்தை மேற்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள் பலரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கைதிகள் விடுதலைக்காக வடக்கு, கிழக்கில் இன்று முழுஅடைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து திங்களன்று முடிவு – சிறிலங்கா அதிபரின் மற்றொரு வாக்குறுதி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.