மேலும்

மருத்துவ சோதனைக்காக திடீரென சிங்கப்பூர் சென்றார் ரணில் – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

ranilசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவசர மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காகவே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக சிறிலங்கா பிரதமரின் செயலகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், அவருக்கு தீவிரமான எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவும் சிங்கப்பூருக்குச் சென்றிருக்கிறார்.

இன்று காலை 7.40 மணியளவில் கட்டுநாயக்கவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் இவர்கள் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் தற்போது சிங்கப்பூரிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *