மேலும்

நாள்: 27th November 2015

வவுனியா பிரஜைகள் குழு ஏற்பாட்டில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்

ஈழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து, வவுனியாவில் இன்று ‘மாவீரர் நாள்’ உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வீரத்தாலும் ஈகத்தாலும் கட்டியெழுப்பிய தேசிய விடுதலை இலக்கைச் சிதைத்து விடாதீர்கள்- உருத்திரகுமாரன்

மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நினைவுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி

தாயக விடுதலைக்காக களமாடி மடிந்த வீரர்களை நினைவுகூரும், மாவீரர் நாள் இன்று தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உறவுகளை நினைவுகூரும் உரிமையை தடுக்கக்கூடாது – தமிழ் அரசியல் தலைவர்கள் கோரிக்கை

மரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூருவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கக் கூடாது என்று  தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரை மாய்த்த செந்தூரனுக்கு அனுதாபம் தெரிவித்து வடக்கில் பாடசாலைகள் இன்று மூடப்படும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தன் உயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புநிலையில் இருக்கிறதாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

வடக்கில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சு முழு அளவிலான விழிப்பு நிலையில் இருக்கும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நெஞ்சறையில் இடம்பிடித்தோரை நினைவு கொள்வோம்

நவம்பர் – 27. மாவீரர்களின்  நாள். ஈழக்கனவு சுமந்து சுதந்திரக் காற்றின் சுவாசத்துக்காய் தம் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு முகவரியான நாள் இது.