மேலும்

வளிமண்டலத்தில் எரிந்து போனது மர்மப்பொருள் – ஆர்தர் சி கிளார்க் நிலையம் அறிவிப்பு

WT1190F-UFO (1)சிறிலங்காவுக்கு தெற்கேயுள்ள கடலில் இன்று விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட எனப் பெயரிடப்பட்ட மர்மப்பொருள், வளிமண்டலத்துக்குள் நுழைந்த போது எரிந்து போய் விட்டதாக ஆர்தர் சி கிளார்க் நிலையம் அறிவித்துள்ளது.

பூமியில் இருந்து 80 தொடக்கம் 100 கி.இற்கு இடைப்பட்ட வளிமண்டலத்துக்குள் நுழைந்த போது இந்த மர்மப் பொருள் எரிந்து விட்டதாகவும், எதிர்பார்க்கப்பட்டது போல இதன் சிதைவுகள் கடலில் விழவில்லை என்றும், ஆர்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த மர்மப் பொருள் இன்று மாலை 6.30 மணியளவில் பூமியின் மீது விழலாம் என்று ஆர்தர் சி கிளார்க் நிலையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது எரிந்து போன இந்த மர்மப் பொருளின் சிதைவுகள் அல்லது துகள்கள் நிலத்தில் விழுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று மற்றொரு தகவல் கூறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *