மேலும்

நாள்: 23rd November 2015

ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் – கூட்டமைப்பு

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது.

வேறு நாடுகளின் கடற்படைத் தளங்களுக்கு சிறிலங்காவில் இடமில்லை – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் ஏனைய நாடுகளின் கடற்படைத் தளங்கள் அமைக்க இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இன்று ஆரம்பமான, சிறிலங்கா கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சமந்தா பவர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறார் ஒபாமா- சமந்தா பவர்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர்.

ஆட்கடத்தல்களுக்கு சிறிலங்கா கடற்படை பயன்படுத்திய வான் கைப்பற்றப்பட்டது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், தெகிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு ஆட்கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றை, திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியக் கடற்படைத் தளபதி சிறிலங்கா பயணம்

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே டோவன், நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா கடற்படையின் ஏற்பாட்டில் காலியில் இன்று ஆரம்பமாகவுள்ள கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே, இந்தியக் கடற்படைத் தளபதி நேற்று கொழும்பை வந்தடைந்தார்.