சிறிலங்கா அதிபரின் ஆலோசகராக முன்னாள் கடற்படைத் தளபதி நியமனம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபருக்கான கடல்சார் விவகாரங்களுக்கான ஆலோசகராக, அட்மிரல் ஜெயந்த பெரேரா பணியாற்றுவார் என்றும், இவரது நியமனம், கடந்த 13ஆம் நாளில் இருந்து நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.