மேலும்

மாதம்: April 2019

தாக்குதல்களுடன் இந்தியாவுக்கு நேரடித் தொடர்பு – சிறிலங்கா தளபதியின் பெயரில் பாகிஸ்தான் குசும்பு

பாகிஸ்தானைத் தளமாக கொண்ட பாகிஸ்தான் இராணுவ ஆதரவு கீச்சகப் பதிவர்கள், போலியான சிறிலங்கா கீச்சக கணக்குகளின் மூலம் இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு

சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்கும்படி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை

ஈஸ்டர் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு  தெரியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர்

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

போதிய நடவடிக்கை இல்லை – சிறிலங்கா அரசை சாடுகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

600 வெளிநாட்டவர்களை நாடு கடத்த சிறிலங்கா பிரதமர் உத்தரவு

இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி – இன்றைய அமைச்சரவை கூட்டம் சூடுபிடிக்கும்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு ஐதேக நாடாளுமன்றக் குழு நேற்று முடிவு செய்துள்ளது.

தாக்குதல்களுடன் தொடர்புடைய 59 பேர் கைது

சிறிலங்காவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 59 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பலியான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு

சிறிலங்காவில் கடந்த 21ஆம் நாள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 இலங்கையர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியது பிரான்ஸ்

பிரான்சுக்குச் சொந்தமான இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவில் அடைக்கலம் தேடிய 60 இலங்கையர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம், கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.