மேலும்

பிரகீத்தை கடத்திய சத்யா மாஸ்டர், நகுலனுக்கு விளக்கமறியல்

gavelஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சத்யா மாஸ்டர் எனப்படும் கணபதிப்பிள்ளை சுரேஸ், நகுலன் எனப்படும் சுமதிபாலன் சுரேஸ் ஆகிய இருவருமே, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்ற சிறிலங்கா இராணுவ முகாமில் ஒப்படைத்திருந்தனர்.

இவர்கள் இருவரும், வவுனியாவில்  கைது செய்யப்பட்டனர்.

நேற்று ஹோமகம நீதிமன்றத்தில் இவர்கள் நிறுத்தப்பட்டு, ஒரு மாதம் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

கருணா குழுவில் இருந்து செயற்பட்ட இவர்கள், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *