இந்திய பாதுகாப்புச் செயலருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சந்திப்பு
சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, இந்தியப் பாதுகாப்புத் செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
5வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லிக்குச் சென்றிருந்த போது கடந்த 16ஆம் நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
