மேலும்

மாதம்: January 2015

மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா – ‘சதித்திட்டம்’ குறித்து விபரிக்கிறார்

அலரி மாளிகையை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிடவுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே,அதிபர் தேர்தல் நாளன்று இரவு தாம், அலரி மாளிகைக்குச் சென்றதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லசந்த, ஜெயராஜ், ரவிராஜ், ஜோசப் கொலைகள் குறித்து மீள் விசாரணை

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் மொகான் பீரிசை கண்டதாக நினைவில்லையாம் – உதய கம்மன்பில கூறுகிறார்

தேர்தல் நாளன்று இரவு அலரி மாளிகையில் பிரதம நீதியரசர் இருந்தாரா என்பது தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ள முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனம் செய்வது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மைத்திரி அரசின் மூன்று அதிரடி நடவடிக்கைகள்

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் பணியாற்றும், வெளிவிவகாரச் சேவையைச் சாராத, அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக மொகான் பீரிஸ் முடிவு

சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் ஜெனரல் ஆனார் சரத் பொன்சேகா – குடியுரிமையை வழங்கவும் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னைய ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு மீண்டும் ஜெனரல் பட்டமும் அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா ஐனநாயக பண்புகளுக்கு மீளவும் திரும்ப அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்?

திரு.ராஜபக்ச அமெரிக்காவின் குடிமகன் என்ற வகையில் 1996 போர்க் குற்றச் சட்டத்தின் கீழ் இவர் உலகின் எந்தவொரு நாட்டிலும் வைத்து அமெரிக்க நீதிமன்றங்களின் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கைதுசெய்யப்பட முடியும். மறுவழியில் பார்த்தால், திரு.ராஜபக்ச விடயத்தில் அமெரிக்கா மிகச் சரியான பொருத்தமான நியாயப்படுத்தலை தனிப்பட்ட ரீதியாக மேற்கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.

பிரதேசசபை உறுப்பினரை முழந்தாளிட வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவாரப்பெரும கைது

அகலவத்தையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேசசபை உறுப்பினரை தாக்கி, முழந்தாளிட வைத்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவாரப்பெரும இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா உதவியுடன் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை – இன்று கொழும்பில் முக்கிய ஆலோசனை

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நாவின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்று முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.

வடக்கில் இருந்து படைகள் குறைக்கப்படும் – புதுடெல்லியில் மங்கள வாக்குறுதி

புதிய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் படைக்குறைப்பைச் செய்யும் என்றும்,  போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை நடத்தும் என்றும், புதுடெல்லியில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.