சிறிலங்கா அதிபராக மைத்திரி, பிரதமராக ரணில் பதவியேற்றனர்
சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும், இன்று மாலை 6.21 மணியளவில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும், இன்று மாலை 6.21 மணியளவில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச, தனது சொந்த ஊரான மெதமுலானவுக்குச் சென்றுள்ளார்.
சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், புதிய அரசாங்கம் சீனாவுடன் நட்புரீதியான கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், அவரை இந்தியாவுக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய அதிபராக, புதிய ஜனநாயக முன்னணியின் சின்னத்தின் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர்.
சிறிலங்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வியை ஒப்புக் கொண்டு இன்று காலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 22 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், 103 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 51.54% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (காலை 9.30 மணி)