மேலும்

நாள்: 21st January 2015

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக மொகான் பீரிஸ் முடிவு

சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் ஜெனரல் ஆனார் சரத் பொன்சேகா – குடியுரிமையை வழங்கவும் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னைய ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு மீண்டும் ஜெனரல் பட்டமும் அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா ஐனநாயக பண்புகளுக்கு மீளவும் திரும்ப அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்?

திரு.ராஜபக்ச அமெரிக்காவின் குடிமகன் என்ற வகையில் 1996 போர்க் குற்றச் சட்டத்தின் கீழ் இவர் உலகின் எந்தவொரு நாட்டிலும் வைத்து அமெரிக்க நீதிமன்றங்களின் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கைதுசெய்யப்பட முடியும். மறுவழியில் பார்த்தால், திரு.ராஜபக்ச விடயத்தில் அமெரிக்கா மிகச் சரியான பொருத்தமான நியாயப்படுத்தலை தனிப்பட்ட ரீதியாக மேற்கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.

பிரதேசசபை உறுப்பினரை முழந்தாளிட வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவாரப்பெரும கைது

அகலவத்தையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேசசபை உறுப்பினரை தாக்கி, முழந்தாளிட வைத்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவாரப்பெரும இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா உதவியுடன் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை – இன்று கொழும்பில் முக்கிய ஆலோசனை

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நாவின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்று முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.

வடக்கில் இருந்து படைகள் குறைக்கப்படும் – புதுடெல்லியில் மங்கள வாக்குறுதி

புதிய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் படைக்குறைப்பைச் செய்யும் என்றும்,  போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை நடத்தும் என்றும், புதுடெல்லியில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

முன்னாள் பாதுகாப்புச் செயலருக்கு கிழக்கு மாகாண ஆளுனர் பதவி?

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக, முன்னாள் பாதுகாப்புச் செயலரும், ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியுமான ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தாவின் வசம் இருந்த 3322 துப்பாக்கிகளைக் காணவில்லை – விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து, 3322 ஆயுதங்கள் காணாமற்போயுள்ளது குறித்து சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆசனமின்றி அல்லாடிய அத்தநாயக்க – ஆளும்கட்சி வரிசையில் அமர்வதற்கு அடம்

ஆளும்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படாததால், ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், மகிந்த ராஜபக்சவுடன் கடைசி நேரத்தில் இணைந்து கொண்டவருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்.

தமிழர் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க முன்வர வேண்டும் – இரா. சம்பந்தன் கோரிக்கை

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையை அவசர விடயமாகக் கருதி தீர்வு காண முன்வர வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.