மேலும்

நாள்: 4th January 2015

தேர்தலில் இராணுவத் தலையீடு குறித்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கவலை

அரச வளங்களின் பயன்பாடு மற்றும், இராணுவத் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் முஸ்லீம்களின் வாக்குகளையும் தற்போதைய தேர்தலில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை?

சிங்கள பௌத்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.ராஜபக்ச மற்றும் திரு.மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சிங்கள மக்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதால் முஸ்லீம் மக்களினதும் தமிழ் மக்களினதும் வாக்குகள் மிக முக்கியமானவை என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனிவாவில் நிறுத்தவே கே.பியை வைத்திருக்கிறதாம் சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக வைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சல்மான் கான் வீட்டுக்கு முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல்: உன்னிப்பாக கண்காணிக்கும் அனைத்துலக சமூகம்

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்தும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ஏற்படக் கூடிய சூழ்நிலைகள் குறித்தும், அனைத்துலக சமூகம் கவலை கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவின் மீன்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் இறக்குமதி தடை வரும் 15ம் நாள் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த தடையை எதிர்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளதாக, சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணிகளை துவக்கினர்

வரும் வியாழக்கிழமை சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நேற்று தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

வியாழன்று நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம் – தோல்வி அச்சம் மகிந்தவைத் தொற்றியது

அதிபர் தேர்தல் முடிந்தவுடன், வரும் 8ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி உள்ளிட்ட மகிந்தவின் அமைச்சர்கள் பலரும் எதிரணிக்கு பாய்கின்றனர்

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இந்தவாரம் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னார் ஆயரிடம் மகிந்தவை மன்னிப்புக்கோர வைத்த அரச வானொலி

சிறிலங்கா அரசாங்க வானொலியில் செய்யப்பட்ட தரக்குறைவான பரப்புரைக்காக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மன்னிப்புக் கோரியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.