மேலும்

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக மொகான் பீரிஸ் முடிவு

Mohan-Peirisசிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுக்களை அடுத்தே, மொகான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், பழிவாங்கும் வகையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட, சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பதவிக்கு அமர்த்தும் நோக்கிலேயே, மொகான் பீரிசை பதவியில் இருந்து விலக வைக்க அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

முறையற்ற வகையில் பிரதம நீதியரசர் பதவியை பிடித்த மொகான் பீரிஸ் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், சட்டத்தரணிகள் சங்கம் அவருக்கு 48 மணிநேர காலக்கெடுவையும் கொடுத்திருந்தது.

கொழும்பில் நேற்று முன்தினம் ஆரம்பமாக ஆசிய சட்டமா அதிபர்களின் மாநாட்டில் கூட, மொகான் பிரிஸ் பங்கேற்க விடாமல் புதிய அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *