மேலும்

நாள்: 1st January 2015

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு மைத்திரி வாக்குறுதி

சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த தான் நடவடிக்கை எடுப்பேன் என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

மகிந்தவின் மற்றொரு அமைச்சரும் மைத்திரிக்கு ஆதரவு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி உயர்கல்வி அமைச்சராக பதவி வகித்த நந்திமித்ர எக்கநாயக்கவும், இன்று எதிரணிக்குத் தாவியுள்ளார்.

சிறிலங்கா வந்தார் குமார் குணரத்தினம்

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான குமார் மஹத்தயா என்று அழைக்கப்படும்  குமார் குணரத்தினம் இன்று  அதிகாலை சிறிலங்கா வந்தடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

மர்மப் பயணம் மேற்கொள்ளும் சீன மீன்பிடிக் கப்பல்களுக்கு தடைவிதித்தது சிறிலங்கா

சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, சீன மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்இளித்து வாழ்வதற்காக தமிழ்மக்கள் போராடவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சிறிலங்கா அதிபரை நாடிச்சென்று, அவர் தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மைத்திரியைத் தோற்கடிக்க குமார் குணரத்தினத்துக்கு கதவைத் திறந்தது சிறிலங்கா

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட, குமார் குணரத்தினத்தை மீண்டும் கொழும்புக்குத் திரும்பி வருவதற்கு,  அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.