மேலும்

நாள்: 28th January 2015

ஒரு நாள் மட்டும் பிரதம நீதியரசராக இருப்பார் சிராணி பண்டாரநாயக்க

சிறிலங்காவின் பிரதம நீதியரசராக மீண்டும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சிராணி பண்டாரநாயக்க நாளை தனது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபரிடம் ஒப்படைப்பார் என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் வந்தார் சிராணி பண்டாரநாயக்க – குழப்பத்தில் சிறிலங்கா நீதித்துறை

சிறிலங்காவின் பிரதம நீதியரசராக மீண்டும் பொறுப்பேற்பதற்காக – முன்னைய அரசாங்கத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 43வது பிரதம நீதியரசர்  சிராணி பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற வளாகத்துக்கு தற்போது வருகை தந்துள்ளார்.

அகதிகளை திருப்பி அழைப்பது குறித்து இந்திய – சிறிலங்கா பேச்சுக்கள் வெள்ளியன்று ஆரம்பம்

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் சிறிலங்காவும் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளன.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்

தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்கா உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மகிந்தவைத் தோற்கடிக்கும் திட்டத்தில் நிமால் சிறிபாலவும் பங்கெடுத்தார் – ராஜித சேனாரத்ன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்கும், திட்டத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வாவும் அங்கம் வகித்திருந்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் யாழ்ப்பாணம் செல்கிறார்

சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

யோசித ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் நிராகரிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான, லெப். யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து விலகுவதாக அளித்த பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா கடற்படைத் தளபதி நிராகரித்துள்ளார்.

சிறிலங்காவில் புதிய நம்பிக்கை – அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து

சிறிலங்காவில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதுடெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் மகிந்த

சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைந்த பின்னர், தமக்கு எதிராகவும், தமது குடும்பத்தினருக்கு எதிராகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.