மேலும்

Archives

8 இலங்கை மாலுமிகளுடன் எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டது

சிறிலங்கா மாலுமிகளுடன் இந்தியப் பெருங்கடலில் பயணித்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களினால், கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இலங்கை மாலுமிகள் எட்டுப் பேர் இருந்தனர் என்று சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜப்பானின் இராட்சத நாசகாரி போர்க்கப்பல் சிறிலங்கா வருகிறது

ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, நாசகாரிப் போர்கப்பலான இசுமோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றவாளிகள் இப்போது மனித உரிமை காவலர்களாகி விட்டனர் – என்கிறார் கோத்தா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, இணை அனுசரணை வழங்குவது சிறிலங்கா அரசாங்கத்தின் பலவீனம் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

யாழ். குடாநாட்டு நிலவரங்களை ஆய்வு செய்த இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர்

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பதவியேற்ற கப்டன் அசோக் ராவ், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசுகளின் நிலைப்பாடுகளால் ஆபத்தில் சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள்

அண்மையில் அவுஸ்ரேலியாவிற்குப் பயணம் செய்திருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் நாடு திரும்புமாறும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

தமிழ்நாட்டு பக்தர்கள் வராததால் களையிழந்த கச்சதீவு திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பமாகியது. இந்தியாவில் இருந்து பக்தர்களோ, குருமாரோ வருகை தராதததால், இந்த திருவிழா களையிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா தீர்மானத்தை கடும் கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தக் கோருகிறது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக சிறிலங்கா நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறும், அதனைக் கண்காணிக்க சிறிலங்காவில் பணியகம் ஒன்றை நிறுவுமாறும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் சக்திகளுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா ஆர்வம்

சமுத்திரங்களில் தடையற்ற வணிகத்தை பாதுகாப்பதற்கும், அமைதியான கடற்பயணங்களை உறுதிப்படுத்துவதற்கும் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பால் கடல்சார் சக்திகளுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா ஆர்வமாக இருக்கிறது என்று அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்

அம்பாந்தோட்டையில் போல் ரிவர் என்ற அதிவேக போக்குவரத்துக் கப்பலில் வந்த அமெரிக்க கடற்படையினர், ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்கா கடற்படை மற்றும் சிவில் அதிகாரிகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்ற நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர்

சபாநாயகரின் உத்தரவை மீறிய கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்றுவதற்காக சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு இன்று காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.