யாழ். குடாநாட்டு நிலவரங்களை ஆய்வு செய்த இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர்
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பதவியேற்ற கப்டன் அசோக் ராவ், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மார்ச் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கான முதல் பயணத்தை மேற்கொண்ட கப்டன் அசோக் ராவ், பலாலியில் உள்ள யாழ். படைகளின் தலைமையகத்தில், யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும், இந்திய இராணுவத்தில் உள்ள பயிற்சி நடைமுறைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு, பொதுமக்கள் மத்தியில் உள்ள பொதுவான கரிசனைகள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயல்முறைகள் தொடர்பாகவும், கப்டன் அசோக் ராவும், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும் கலந்துரையாடியுள்ளனர்.