மேலும்

Archives

வடக்கு, கிழக்கில் ஏறுதழுவுதலுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள்

ஏறுதழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்துள்ள பெரும் போராட்டத்துக்கு, உலகத் தமிழர்களின் பேராதரவு கிடைத்துள்ள நிலையில், இன்று கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன.

சிறிலங்காவுடன் மீண்டும் இணைகிறார் எரிக் சொல்ஹெய்ம் – ரணில் சந்திப்பு

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தும் பேச்சுக்களில் நடுநிலையாளராக கலந்து கொண்ட நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முடன், மீண்டும் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சீனாவின் வெள்ளை அறிக்கையும் சிறிலங்காவும்

கடந்த வாரம் சீனாவினால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையானது, ஏன் சிறிலங்காவிற்கு தற்போதும் எதிர்காலத்திலும் சீனாவின் உதவி தேவை என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

சுவீடன் வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சு

சுவீடனுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோமைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலும் ஏறுதழுவுதலுக்கு ஆதரவான போராட்டம் – ஒளிப்படங்கள்

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டு)  விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும், கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை பொறுப்பேற்றார் அமைச்சர்

உள்ளூராட்சி எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று சிறிலங்காவின் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.

சீன அதிபருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை,  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று உலக பொருளாதார மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு முன்னதாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஓமந்தையில் இருந்து சிறிலங்கா படையினர் முற்றாக வெளியேறவில்லை

வவுனியா – ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த காணிகளை விட்டு சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.

‘கைவினைக்கதிர்’ நூல் வெளியீட்டு விழாவும் கைப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும்

யாழ். மாவட்ட கைப்பணி அபிவிருத்திச் சங்கத்தின் ‘கைவினைக்கதிர்’ நூல் வெளியீட்டு விழாவும் கைப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை இரண்டு மணி வரை யாழ்., சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.

நீதிக்கான தேடல் – சிறிலங்கா எதிர்கொள்ளும் சிக்கல்

அனைத்துலக மட்டத்தில் பெரியளவில் தெரியப்படுத்தப்படாவிட்டாலும் கூட, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா மிகப் பாரிய அரசியல் அதிகாரத்துவ ஆட்சியைக் கொண்டிருந்தது. ஜனவரி 2015ல், நாட்டின் அதிகாரத்துவ கடும்போக்கு அதிபரான மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.