மேலும்

Archives

சீன கடற்படை உயர் அதிகாரிகள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

சீன கடற்படையின் உயர்மட்ட அதிகாரிகள் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

உலங்குவானூர்திகளுக்கான உதிரிப்பாகங்களை சிறிலங்காவுக்கு வழங்கியது இந்தியா

சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகளுக்குத் தேவையான அவசர உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை விநியோகித்திருப்பதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சுங்க, துறைமுக பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா- அமெரிக்கா இடையே பேச்சு

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்பு தொடர்பாக வலுவான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

உதவிக் குழுக்களுடன் சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு வந்தன

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கும், உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டும் சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

சம்பூரில் உயிருடன் கரையொதுங்கிய 20 திமிங்கலங்கள்

திருகோணமலை – சம்பூரில் 20 இற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட மோரா சூறாவளி மற்றும் சிறிலங்காவில் கொட்டிய கடும் மழையைத் தொடர்ந்து, சம்பூர், பழைய இறங்குதுறைப் பகுதியில் 20இற்கும் அதிகமான திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கின.

குண்டுப் புரளி கிளப்பிய இலங்கையரால் மலேசிய விமானம் மெல்பேர்னில் அவசரமாக தரையிறக்கம்

மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

3 பிரதியமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

சிறிலங்காவில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சற்று முன்னர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நோர்வே தமிழ் 3இன் தமிழர் மூவர்-2017 – இளைய பல்துறை ஆளுமையாளர்கள் மதிப்பளிப்பு

Entrepreneurship எனப்படும் துறையில் மிக இளவயதில் (19) தடம்பதித்து வரும் மயூரன் லோகநாதன், மருத்துவரும் உலகளாவிய சுகாதாரம் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்பு சார்ந்து மிகுந்த ஈடுபாடு உள்ளவரான ஆரணி மகேந்திரன், தமிழ் பாரம்பரிய வாத்திய இசைவடிவங்களுடன் மேற்கத்திய இசைவடிங்களை இணைத்து புத்தாக்க இசைப்படைப்புகளை வழங்கி வரும் மீரா திருச்செல்வம் ஆகியோருக்கு 2017ஆம் ஆண்டுக்கான தமிழ் 3இன் தமிழர் மூவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தீயுடன் சங்கமமானார் அப்பாத்துரை விநாயகமூர்த்தி – பெரும் திரளானோர் அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் சடடவாளருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இந்தியா அனுப்பிய மூன்றாவது உதவிக் கப்பலும் கொழும்பு வந்தது

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிக் கொண்டு மூன்றாவது இந்தியக் கடற்படைக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.