மேலும்

Tag Archives: சிறிலங்கா சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின் புதிய பிரதமர் – வெளியேற்றப்படுவாராம் ரணில்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் பதவியில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற்றும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாளைக்கே சுதந்திரக் கட்சி அரசாங்கம் – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 96 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்முடன் இருந்தால், நாளைக்கே கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 10 பேர் மற்றும் ஒரு முதலமைச்சருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கையளிக்கவுள்ளனர்.

அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவார் மைத்திரி – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக மீண்டும் போட்டியிடுவார் என்று சிறிலங்கா சுமந்திரக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

புலிகளின் பாடல்களுடன் யாழ்ப்பாணத்தில் பரப்புரை செய்யும் சுதந்திரக் கட்சி

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு விடுதலைப் புலிகளின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை மறுநாள் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு எதிர்வரும் 10ஆம் நாள் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது என்று பதில் நாடாளுமன்றச் செயர் நீல் இத்தவெல அறிவித்துள்ளார்.

மொட்டுக்காக பரப்புரை செய்தால் கட்சியை விட்டு நீக்குவோம்- மகிந்தவுக்கு சுதந்திரக் கட்சி எச்சரிக்கை

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக- சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பரப்புரைகளை மேற்கொண்டால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் – வவுனியாவில் 12 அரசியல் கட்சிகள், 4 சுயேட்சைக் குழுக்கள் களத்தில்

வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 4 சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன.

கூட்டு அரசில் இணைந்திருப்பதா? – 31ஆம் நாள் முடிவு செய்கிறது சுதந்திரக் கட்சி

ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா- இல்லையா என்று முடிவு செய்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மத்திய குழுக்  கூட்டம் இடம்பெறவுள்ளது.

தேர்தலுக்குப் பின் மகிந்தவின் கட்சி அழிந்து விடும் – தயாசிறி ஜெயசேகர

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தும் முயற்சிகளை நாமல் ராஜபக்சவும், பிரசன்ன ரணதுங்கவுமே சீர்குலைத்ததாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மகிந்தவின் கட்சி அழிந்து போய் விடும் என்றும் தெரிவித்துள்ளார்.