மேலும்

நாளை மறுநாள் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு

sri lanka parliamentசிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு எதிர்வரும் 10ஆம் நாள் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது என்று பதில் நாடாளுமன்றச் செயர் நீல் இத்தவெல அறிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் இந்த சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த அறிக்கை குறித்து விசாரிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜேவிபி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு எதிரணி என்பன சபாநாயகரிடம் கோரியிருந்தன.

அத்துடன் ஐதேக தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகரைக் கோரியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *