அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவார் மைத்திரி – சிறிலங்கா சுதந்திரக் கட்சி
அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக மீண்டும் போட்டியிடுவார் என்று சிறிலங்கா சுமந்திரக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிக்கப்படாது, அரசியலமைப்பு மாற்றம் நடைபெறாது, அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக மீண்டும் போட்டியிடுவார்.
இரண்டாவது பதவிக்காலத்துக்காகப் போட்டியிடுவதற்கு மைத்திரிபால சிறிசேன தான் பொருத்தமான வேட்பாளர்.
அடுத்த அதிபராக மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில், பெரும்பான்மையான மக்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.