மேலும்

Tag Archives: விடுதலைப் புலிகள்

விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் – சபாநாயகருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன்.

காணிகளை விடுவிக்கும் இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா

வடக்கில் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்காக இராணுவ முகாம்களை மூடி, முகாம்களின் அளவைச் சுருக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

பேசலாம் என்று பிரபாகரனை அழைத்தேன், அவர் பதிலளிக்கவில்லை – என்கிறார் மகிந்த

தமிழர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கு பேச்சு நடத்துவதற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தாம் அழைப்பு விடுத்த போதும், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரபாகரனைக் காப்பாற்றத் தவறினாரா கருணாநிதி? – என்.ராம் செவ்வி

கலைஞர் மு.கருணாநிதியின் தனிச்சிறப்புகள், அணுகுமுறை, அரசியலில் அவர் ஆற்றிய பங்கு உள்ளிட்டவை குறித்து மூத்த ஊடகவியலாளரான ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் பிபிசி தமிழிடம் உரையாடியிருந்தார்.  அதில் விடுதலைப் புலிகள் தொடர்பாக கருணாநிதியின் அணுகுமுறைகள் பற்றிய அவர் கூறிய கருத்துக்கள்-

விஜயகலாவுக்கு எதிரான விசாரணை நிறைவு – சட்டமா அதிபருக்கு அறிக்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மேற்கொண்டு வந்த விசாரணைகள் முடிவடைந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

10 ஆண்டுகளில் 12,186 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு

சிறிலங்காவில் 2008ஆம் ஆண்டுக்கும், 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 12,186  விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை

விடுதலைப் புலிகள் குறித்து அண்மையில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக, வட மாகாண முதலமைச்சரிடம் சிறிலங்கா காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

விஜயகலா உரையின் சிங்கள, ஆங்கில மொழியாக்க வடிவங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப் புலிகள் தொடர்பான விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையின் சிங்கள, அங்கில மொழிபெயர்ப்புகளை வழங்குமாறு அரசாங்க மொழிபெயர்ப்பு திணைக்களத்துக்கு கோட்டு நீதிவான் நீதிமன்ற நீதிவான், ரங்க திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலை விட்டு விலகமாட்டேன் – விஜயகலா திட்டவட்டம்

அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்.