மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

புலிகளால் இன்னமும் ஆபத்து – மகிந்த ராஜபக்ச

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்புகளால் நாட்டுக்கு இன்னமும் ஆபத்து உள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்தவின் இரகசியங்களை போட்டுடைக்கிறார் சம்பிக்க

2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் ஆட்சியில் எனக்கும் அநீதி இழைக்கப்பட்டது – அண்ணன் சமல் புலம்பல்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தனக்கும் அநீதி இழைக்கப்பட்டதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக புலம்பியிருக்கிறார் சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச.

கூச்சல் எழுப்பியதால், கோபத்தில் பாதியில் நின்றது மகிந்தவின் உரை

தம்புள்ளையில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

810 இணையத்தளங்களை குறிவைக்கிறது சிறிலங்கா?

வெளிநாடுகளில் இருந்து செயற்படும் – சிறிலங்கா குறித்த செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

போரில் பங்கேற்ற படையினரின் விபரங்களைக் கோரியுள்ளதாம் ஐ.நா – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

மைத்திரியின் சுகாதார அமைச்சைக் கைப்பற்றினார் திஸ்ஸ அத்தநாயக்க

ஐதேகவில் இருந்து அரசதரப்புக்குத் தாவிய திஸ்ஸ அத்தநாயக்க சிறிலங்காவின் புதிய சுகாதார அமைச்சராக இன்று காலை பொறுப்பேற்றுள்ளார்.

திருப்பதியில் இருந்து திரும்பிய மகிந்தவை அலரி மாளிகைக்கு செல்லவிடாமல் தடுத்த ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வசம் உள்ள மேல் மாகாணசபையின் ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேரடியாக இறங்கியுள்ளார்.

பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனும் பதவி விலகினார்

மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த – பிரதியமைச்சர் வேல்சாமி இராதாகிருஸ்ணன் இன்று பிற்பகல் தனது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தமிழர்களை வெளியேற்றி விட்டு திருப்பதியில் தரிசனம் செய்த மகிந்த

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடத்த திருப்பதி செல்ல முயன்ற தமிழ் அமைப்புகளை ஆந்திர காவல்துறையினர் தமிழ்நாடு எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.