பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனும் பதவி விலகினார்
மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த – பிரதியமைச்சர் வேல்சாமி இராதாகிருஸ்ணன் இன்று பிற்பகல் தனது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவர் கடந்த ஒக்ரோபர் மாதம் 9ம் நாள் தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் உறவு பிரதி அமைச்சராக சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டிருந்தார்.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே இவர் தனது பதவியை விட்டு விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.