மகிந்தவின் தேர்தல் பணியகத்தில் நுழைந்த அரச புலனாய்வு அதிகாரி கைது
குருநாகலவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் பணியகத்தில் ஆயுதம் தாங்கிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருநாகலவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் பணியகத்தில் ஆயுதம் தாங்கிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘குடும்ப இராச்சியத்தைக்’ கட்டியெழுப்புவதற்காகவே இதுவரை காலமும் மகிந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பயன்படுத்தினார். இவர் தனது கட்சி உறுப்பினர்களை ‘கறிவேப்பிலை’ போன்று தூக்கி எறிந்தார். கறிவேப்பிலை போன்று மகிந்தவால் தூக்கி எறிந்தவர்களுள் மைத்திரி மற்றும் சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் அடங்குவர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, கௌரவமாக அரசியலை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ராஜபக்ச குடும்பத்தினர் கோரியுள்ளதாக ‘சத்ஹண்ட’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து எந்த நிதியுதவியையும் தாம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராகினாலும் கூட, இவர் அதிபராகப் பதவி வகித்த போது செயற்பட்டது போன்று பலமுள்ள ஒருவராகத் தன்னைக் காண்பிக்க முடியாது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களைத் தோற்கடிக்க, அவர்களின் பரப்புரையை ஊளையிட்டுக் குழப்பும் புதிய உத்தியை மகிந்த ராஜபக்ச அணியினர் கையாளத் தொடங்கியுள்ளனர்.
களுத்துறையில் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் நாள் நடக்கவுள்ள, மகிந்த ராஜபக்ச பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து, நீக்குவதற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவுத் தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்கவே, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஐந்து பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்குள்- மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும், அரசியல் தீர்வு ஒன்று, ஆட்சியமைத்து ஆறுமாதங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இனவாதப் பரப்புரையில் இறங்கியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா.