மேலும்

மகிந்தவின் தேர்தல் பணியகத்தில் நுழைந்த அரச புலனாய்வு அதிகாரி கைது

Arrestகுருநாகலவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் பணியகத்தில் ஆயுதம் தாங்கிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர், சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவையை சேர்ந்தவர் என்று தம்மை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் முன்னாள் அமைச்சர் சாலிந்த திசநாயக்கவின் நெருங்கிய நண்பர் என்றும், அவரது மனைவியின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றிருந்தார் என்றும், சிறிலங்கா காவல்துறைத் தலைமையக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இது மகிந்த ராஜபக்சவை படுகொலை செய்வதற்கான சதி என்றும் அதற்காகவே அரச புலனாய்வு சேவை அதிகாரி அனுப்பப்பட்டதாகவும் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *