பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவார் ராஜ்நாத் சிங்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பார் என “சண்டே ரைம்ஸ்“ செய்தி வெளியிட்டுள்ளது.


