மேலும்

Tag Archives: சீனா

மகிந்தவுக்கு நிதி உதவி வழங்கவில்லை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சீன நிறுவனம்

சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது எந்தவொரு அரசியல்வாதிக்கும், தாம் நிதியுதவி வழங்கவில்லை என்று, சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகிந்தவுக்கு ஆதரவாக கீழ்த்தரமான பரப்புரையில் சீனா ஈடுபடாது – என்கிறார் மங்கள

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு சீனா ஆதரவளித்து வருவதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவின் கடன்களை ரத்துச் செய்யும் திட்டமில்லை – என்கிறது சிறிலங்கா அரசாங்கம்

சீனாவிடம் பெறப்பட்ட கடன்களை ரத்துச் செய்யும் திட்டம் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரையா? – மறுக்கிறது சீனா

மீண்டும் மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் வகையில் சீனா பரப்புரையில் இறங்கியுள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் நிராகரித்துள்ளது.

மைத்திரி அரசின் முடிவினால் சீனா மகிழ்ச்சி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை விரிவாக்கும் திட்டத்துக்கு சிறிலங்காவின் துற்போதைய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து சீனா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பிரகடனத்தில் கையெழுத்திட்டது சிறிலங்கா

சீனாவின் முன்முயற்சியால் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிப் பிரகடனத்தில் சிறிலங்கா இன்று கையெழுத்திட்டுள்ளது. பீஜிங்கில் நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

சீனாவை முறியடிக்க சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்தியா போர்ப்பயிற்சி

இந்தியப் பெருங்கடலுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், சிறிலங்கா உள்ளிட்ட முக்கியமான ஆசிய பசுபிக் நாடுகளுடன் இந்தியா கடற்படைப் போர்ப்பயிற்சிகளை நடத்தவுள்ளது.  ரைம்ஸ் ஒவ் இந்தியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சீனா வழங்கும் கடன்களின் பின்னணி

புராதன ‘பட்டுப்பாதை’யை  தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சீனா ‘ஒரு அணை மற்றும் ஒரு பாதை’ என்கின்ற திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புராதன ‘பட்டுப்பாதை’ திட்டத்தின்  கீழ் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவிடம் பாரிய போர்க்கப்பலை வாங்குகிறது சிறிலங்கா

சிறிலங்கா கடற்படைக்கு பாரிய போர்க்கப்பல் ஒன்றை சீனாவிடம் இருந்து வாங்குவது குறித்து, சீன பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு ஒதுக்கீடு இந்தியா, சீனாவை விட அதிகம்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி, ஒப்பீட்டளவில் இந்தியா, சீனா போன்ற நாடுகளை விடவும் அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.