மேலும்

கொழும்பு துறைமுக நகரில் சீனாவுக்கு காணி உரிமை வழங்கப்படாது – ரணில் வாக்குறுதி

ranilகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்காக, வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில், 20 ஹெக்ரெயர் காணியை சீனாவுக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கம் இணங்கியிருந்தது.

ஆனால் தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டவர்கள் எவருக்கும் காணிகளை விற்பனை செய்யாது.

காணிகளை குத்தகைக்கு வழங்கியிருந்தாலும், விற்பனை செய்திருந்தாலும், நாம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நில உரிமையை வழங்கமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *