மேலும்

ரணிலுக்கும் தெரிவுக்குழு அழைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தமக்கும் சாட்சியமளிக்க அழைப்பு விடுத்துள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று விவாதம் – நாளை வாக்கெடுப்பு

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்றும் நாளையும், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

விக்னேஸ்வரன்- கஜேந்திரன் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தோல்வி

புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் நோக்கில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்படவிருந்த பேச்சுக்கள் ரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அதிநவீன கண்காணிப்பு விமானத்தினால் சர்ச்சை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள சிறப்புத் தேவைகளுக்கான அதிநவீன விமானம் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

சோபாவில் கையெழுத்திடாது சிறிலங்கா அரசாங்கம் – ஐதேகவும் வாக்குறுதி

அமெரிக்க அரசாங்கத்துடன் சிறிலங்கா அரசாங்கம் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷ விதானகே நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.

ரணிலின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர்பார்க்கும் அமெரிக்கா

மிலேனியம் சவால் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக பணிப்பாளர்,  சீன் கெய்ன் குரொஸ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு, ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது குறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்து விமான சேவை – புறக்கணிக்கப்படும் தமிழக விமான நிலையங்கள்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையத்தில் இருந்து, முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளில், தமிழ்நாட்டில் உள்ள எந்த விமான நிலையமும் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது.

சிங்கள அரசை உருவாக்க உதவுமாறு பிக்குகளுக்கு அறைகூவல்

சிங்கள அரசை உருவாக்குவதற்கு பௌத்த பிக்குகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

நெதர்லாந்தில் சிறிலங்காவின் இரண்டு தூதுவர்கள்

நெதர்லாந்தில் தற்போது சிறிலங்காவின் இரண்டு தூதுவர்கள் இருப்பதாகவும், ஒருவர் அதிகாரபூர்வ வதிவிடத்திலும் மற்றொருவர் விடுதியிலும் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.