அவசரகாலச் சட்டம் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு
அவசரகாலச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை இன்னும் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிலரை அரசாங்கம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியிருப்பதால் இது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
