மேலும்

பிரிவு: செய்திகள்

தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்

நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 இளையவர்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.

கிழக்கில் இராணுவத்தின் கீழ் ‘கொரோனா’ தடுப்பு மையங்கள்

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான இரண்டு தடுப்பு மையங்களை சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தியுள்ளது.

நாய்களைப் போல எம்மை தாக்குகின்றனர் – தயாசிறி புலம்பல்

சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் ரவி கருணாநாயக்க?

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பெரும்பாலும் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் தேவாலயங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு

கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை நடைமுறைப்படுத்தவுள்ளது.

ஐதேகவை ஒருங்கிணைக்கும் கடைசி முயற்சியும் நேற்று தோல்வி

ஆழமாகப் பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான, கடைசி முயற்சியும் நேற்று தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலன்னறுவவில் போட்டி – மைத்திரி உறுதி

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குச் செல்லுமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறிய ஆலோசனைகளை நிராகரித்துள்ள, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன, பொலன்னறுவ மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ  அதிகாரிகள்?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகள் மீது பிரித்தானியாவின்  புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவியை காப்பாற்றி ஒளித்து வைத்துள்ள ஆளும்கட்சி முக்கிய புள்ளி?

கைது செய்வதற்காக சிறிலங்கா காவல்துறை தேடிக் கொண்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, சிறிலங்கா அரசாங்கமே ஒளித்து வைத்துள்ளது என்று ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையர்கள் நுழைவதற்கு தடைவிதித்தது கட்டார்

சிறிலங்கா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இன்று தொடக்கம் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.