மேலும்

பிரிவு: செய்திகள்

கோத்தா, அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்டோர் வெளிநாடு செல்லத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்ட நால்வர் வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மோடியின் வருகையின் போது ஜெயகுமாரிக்கு விடுதலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தவாரம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருக்கும், பாலேந்திரன் ஜெயகுமாரியை சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்யக் கூடும் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை பாதுகாக்க சீனா இராஜதந்திர ரீதியாக முயற்சி

சிறிலங்கா அரசாங்கத்தினால், இடைநிறுத்தப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டைப் பாதுகாப்பதற்கு, சீனா தனது இராஜதந்திர முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கும் வருகிறேன்- ருவிட்டரில் மோடி

இந்தவாரம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ருவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேசிய நல்லிணக்க முயற்சிக்கு பிரித்தானிய பிரதமரிடம் உதவி கோரவுள்ளார் மைத்திரி

போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு, பிரித்தானியாவில்  உள்ள செல்வாக்குப் பெற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஆதரவை திரட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது அரசாங்கமும், பிரித்தானியாவின் உதவியைக் கோரவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்

புதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

சிறிலங்கா ஆட்சி மாற்றத்தின் பின் சீனா எதிர்கொள்ளும் சவால்கள் – கேணல் ஹரிகரன்

உலகின் உண்மையான அரசியலின் பிரகாரம், தனது மூலோபாய வெளிக்குள் சீனா உள்நுழைவதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சிறிலங்காவிலும் இந்தியா தனது மேலாதிக்கத்தை இழப்பதற்கு வழிவகுக்கும் என இந்தியா கருதுகிறது.

லண்டன் சென்ற மைத்திரிக்கு வரவேற்பு

லண்டனில் நாளை நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிரித்தானியா சென்றடைந்துள்ளார்.

பயணிகள் கப்பல் சேவைக்கு அவசரம் காட்டியது இந்தியா – ஆப்பு வைத்தது சிறிலங்கா

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரமே ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ரணில், மங்களவை அவசரமாக சந்தித்த சீன தூதுவர் – உடன்பாடுகளை மதிக்குமாறு அறிவுறுத்தல்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதையடுத்து, சீனத் தூதுவர் யி ஜியான்லியாங், அவசரமாக சிறிலங்கா பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.