மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

தேர்தலில் குதிக்க பிஜேபி ஆக உருமாறுகிறது பொது பல சேனா

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், பொது பலசேனா அமைப்பு, பொது ஜன பெரமுன ( பிஜேபி) என்ற பெயரில் போட்டியிடவுள்ளதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

மகிந்த- மைத்திரி பனிப்போர் – ஜூலை 1இல் இறுதி முடிவு

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச அணிக்கும், மைத்திரிபால சிறிசேன அணிக்கும் இடையில் பனிப்போர் நடந்து வரும் நிலையில் ஜூலை 1ஆம் நாள் இறுதியான முடிவு ஒன்று தெரியவரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஐ.நா பொதுச்செயலருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறார் மைத்திரி

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஐ.நா பொதுச்செயலருக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு ஆதரவாக முகநூலில் திரண்டுள்ள 14 ஆயிரம் பேர்

மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு முகநூலில் ஆதரவு பெருகி வருகிறது.

மகிந்தவைப் பிரதமராக்குவதே தனது குறியாம்- பசில் கூறுகிறார்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, நாட்டின் அடுத்த பிரதமராக்குவதற்கு தான் முழுஅளவிலான பரப்புரைகளில் ஈடுபடப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவருக்கே மரணதண்டனை

மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, மற்ற படையினர் பயந்து போயிருந்த போது தாம் விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தொடர்ந்த மோசமான மனித உரிமை மீறல்கள் – அமெரிக்க அறிக்கையில் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் கடந்த ஆண்டிலும் மனித உரிமைகள் பிரதானமான பிரச்சினைக்குரிய விவகாரமாக இருந்தது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கயானாவில் ஒரு தமிழ் பிரதமர்

தென் அமெரிக்காவில் உள்ள கரீபிய நாடான கயானாவின் பிரதமராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மோசஸ் வீராசாமி நாகமுத்து அண்மையில் பதவியேற்றுள்ளார்.

மிருசுவில் படுகொலை வழக்கில் சிறிலங்கா படை அதிகாரிக்கு மரணதண்டனை- நால்வர் விடுதலை

மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 8 தமிழர்களைப் படுகொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவ சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துள்ளது.

இன்றிரவு அல்லது நாளை இரவு சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்றிரவு அல்லது நாளை இரவு கலைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.