பணிந்தது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு – கிழக்கு முதல்வருக்கு எதிரான தடைகள் நீக்கம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளை முப்படையினரும் புறக்கணிக்கும், முடிவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இராணுவ முகாம்களுக்குள், கிழக்கு மாகாண முதலமைச்சர் அனுமதிக்கப்படுவார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.
அதேவேளை, கிழக்கு முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளை இன்று முதல் புறக்கணிக்கப் போவதில்லை என்றும், கடற்படை முகாம்களுக்குள் அவர் அனுமதிக்கப்படுவார் என்றும், சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.