அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சிறிலங்கா அதிபரிடம் நியமனப் பத்திரங்களைக் கையளிப்பு
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, அதுல் கெசாப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.
சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற அதுல் கெசாப், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில்,கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அவர் நேற்று சிறிலங்கா அதிபரிடம் தனது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தார்.
அதேவேளை, நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்வில், இத்தாலியின் புதிய தூதுவர் பாலோ அன்ட்ரியா பாரோரெலி, மற்றும் நெதர்லாந்தின் புதிய தூதுவர் ஜோஆன் டூர்னேவாட்டும் தமது நியமனப் பத்திரங்களை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.