இனப்படுகொலை நடைபெறவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை
சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை எனக் கூறுபவர்களுக்கு, பிரம்டனிலோ, கனடாவிலோ இடமில்லை, கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று, பிரம்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.
பிரம்டனில், தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு விழாவிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.
நாங்கள் தமிழர்கள் இன அழிப்பின் அளவை மறக்கக் கூடாது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள்.
சிறிலங்கா அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பிவருகின்றது.
அவர்கள், உண்மைக்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் முயன்றனர்.
இது ஒரு இனப்படுகொலை மாத்திரமல்ல, உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல்.
தமிழர் படுகொலை நினைவுதூபி என பிரம்ப்டன் நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன். ஆனால் இன்னமும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

