மீண்டும் போட்டியிடுவதா என்று முடிவு செய்யவில்லை – சிறிலங்கா அதிபர்
வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு பலர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், போட்டியிடுவதா இல்லையா என்று தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகிந்த அமரவீரவினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பெருமளவினால் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும், தேர்தல் தொகுதி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு கூட்டணியிலும் இணையக் கூடாது என்றும், அதிபர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடாவிட்டால் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.