பின்னடைவுக்கான காரணத்தை ஆராய கூட்டமைப்பு முடிவு
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக, ஆராய்வதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்றுமுன்தினம் மாலை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது உள்ளூராட்சி தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு சரிந்துள்ளமை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இந்தப் பின்னடைவுக்கான காரணத்தைக் கண்டறிவது என்றும், அதனை எப்படித் திருத்திக் கொள்வது என்று ஆராய்வது எனவும், இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் விரிவாக ஆராய்வதற்காக, விரைவில் கட்சித் தலைவர்கள் கூடிப் பேசுவது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.