இரண்டாவது கட்ட மழைவீழ்ச்சி அடுத்தவாரம் ஆரம்பம்
வடகீழ் பருவக் காலத்தின் இரண்டாவது கட்ட மழை வீழ்ச்சி அடுத்தவாரம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பாதிக்கப்பட்டது.
இடைப்பருவ காலத்தில், காற்று மெதுவாக அல்லது மாறி வீச வேண்டும். காற்றின் வேகம் அதிகரித்தால், மழையைப் பாதிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, அடுத்தவாரம், 100 மி.மீ வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.