காலி துறைமுகத்தில் மிதக்கும் மின்உற்பத்தி நிலையம்
காலி துறைமுகத்தில் 100 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மிதக்கும் மின்சார நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக மின் நிலையத்தில் நேற்று ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
கப்பலில் பொருத்தப்பட்ட, எரிபொருளில் செயற்படும் மின்உற்பத்தி நிலையம் ஒன்றை காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கும் திட்டம் ஒன்று தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.
காலி துறைமுகத்தில் மிதக்கும் மின் நிலையத்தை அமைப்பதற்காக கேள்விப் பத்திரங்கள் ஓகஸ்ட் மாதம் கோரப்படும். 2019அம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் முடிவடையும்.“ என்றும் அவர் தெரிவித்தார்.