சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க அவசரப்படமாட்டோம் – என்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விவகாரத்தில், தமது அரசாங்கம் அவசரமாகச் செயற்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து நாளிதழுக்கு நேற்று வழங்கிய செவ்வியின் போது, பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடடந்த ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நிலைமைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ”போரின் போது என்ன நடந்தது என்ற முதலில் முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
அதனை அறிந்த பின்னரே, தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நல்லிணக்கம் தொடர்பாக சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
காணாமற்போனோர் குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக மற்றொரு அமைப்பு அமைக்கப்படவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.